நிதி அமைச்சகம்

மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ஒப்புதல்


ஜனவரி 2022-ல் மாநில அரசுகள் மொத்தம் ரூ.95,082 கோடியை பெற்றுள்ளன

Posted On: 20 JAN 2022 1:05PM by PIB Chennai

வரிப்பகிர்வின் முன் தவணையாக மாநில அரசுகளுக்கு ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இது, ஜனவரி 2022 மாதத்திற்கு இன்று விடுவிக்கப்படும் வழக்கமான பகிர்வுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மாநில அரசுகள் இதுவரை மொத்தம் ரூ.95,082 கோடியை பெற்றுள்ளன, அல்லது 2022 ஜனவரி மாதத்திற்குரிய வரவுகளை விட இருமடங்கு அதிகமாகும். மாநில வாரியான நிதி பகிர்வு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாத தவணையாக 1939 கோடியே 19 லட்சம் ரூபாயும் முன் தவணையாக 1939 கோடியே 19 லட்சம் என மொத்தம் 3,878 கோடியே 38 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791166

***************



(Release ID: 1791170) Visitor Counter : 230