பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JAN 2022 8:49AM by PIB Chennai

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோரிடம் பேசி அங்கு நிலவும் சூழலை கேட்டு அறிந்தேன், என்று பிரதமர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1786737) வருகையாளர் எண்ணிக்கை : 244