பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 DEC 2021 8:59PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார். தாக்குதலில் உயிர்த் தியாகம் புரிந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு இரங்கலை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்”.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1781289) வருகையாளர் எண்ணிக்கை : 183