பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் திரு.ஹர்பன்ஸ் கபூரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 13 DEC 2021 11:34AM by PIB Chennai

உத்தராகண்ட் சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் திரு.ஹர்பன்ஸ் கபூரின் மறைவு குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது;

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எங்களது மூத்த கட்சித் தோழர் திரு.ஹர்பன்ஸ் கபூர் அவர்களின் மறைவால் கவலை அடைந்தேன். மூத்த சட்டமன்ற உறுப்பினரும், நிர்வாகியுமான அவர், பொதுச் சேவை மற்றும் சமூக நலனில் ஆற்றிய பங்களிப்புக்காக என்றும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

***



(Release ID: 1780820) Visitor Counter : 132