பிரதமர் அலுவலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ படைவீரர்கள் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Posted On: 08 DEC 2021 6:44PM by PIB Chennai

தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ படைவீரர்கள்  மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

“தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் நாம் இழந்துள்ள ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தின் இதர வீரர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இந்தியாவுக்கு உச்சநிலை உறுதியுடன் சேவை செய்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களே எனது எண்ணத்தில் உள்ளன.

உண்மையான தேசபக்தராகிய அவர் நமது ராணுவத்தையும், பாதுகாப்புத் தளவாடங்களையும் நவீனமாக்குவதற்கு மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறார். ராணுவ ரீதியான விஷயங்களில் அவரது மதிநுட்பமும், கண்ணோட்டங்களும் பாராட்டும்படியாக இருந்தன. அவரது மறைவு எனக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓம் சாந்தி

இந்தியாவின் முதலாவது முப்படைகளி்ன் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் உட்பட நமது ராணுவம் தொடர்பான பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய மிக உயர்ந்த அனுபவத்தை அவர் தம்முடன் கொண்டு வந்தார். பாராட்டத்தக்க அவரது சேவையை இந்தியா ஒருபோதும் மறவாது”. என்று பிரதமர் தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.



(Release ID: 1779631) Visitor Counter : 165