பிரதமர் அலுவலகம்

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 20 OCT 2021 9:19AM by PIB Chennai

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்;

“வால்மீகி ஜெயந்தி நன்னாளில் மகரிஷி வால்மீகிக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். நமது வளமான பாரம்பரியம் மற்றும் ஒளிமயமான கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான அவரது பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம். சமூக அதிகாரமளித்தலுக்கான அவரது முயற்சிகள் நமக்கு எப்போதும் ஊக்கமளிக்கும்என்று தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1765064) Visitor Counter : 200