பிரதமர் அலுவலகம்

மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 13 SEP 2021 3:58PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோக தருணத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்: பிரதமர்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*****************



(Release ID: 1754539) Visitor Counter : 199