பிரதமர் அலுவலகம்

நுவாகாயை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 11 SEP 2021 11:04PM by PIB Chennai

புனித திருநாளான நுவாகாயை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

நுவாகாய் ஜுஹார் வாழ்த்துகள்!

இந்தப் புனித தருணத்தில் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். நமது விவசாயிகளின் தலைசிறந்த முயற்சிகள் மற்றும் தேசிய கட்டமைப்பில் அவர்களது பங்களிப்பை  நுவாகாய் அன்று நாம் போற்றுகிறோம்.

ஒவ்வொருவரின் சீரான உடல் நிலை மற்றும் ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

***


 



(Release ID: 1754489) Visitor Counter : 202