உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவிற்கு வர ஆப்கான் மக்கள் இனி மின்னணு விசாவைப் பயன்படுத்துவது கட்டாயம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2021 11:56AM by PIB Chennai

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு விசா நடைமுறையை சீர்படுத்துவதற்காக அவசரகால விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவிற்கு பயணிக்கும் அனைத்து ஆப்கான்  மக்களும் மின்னணு விசாவை  பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில ஆப்கான் மக்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை தொலைத்துவிட்டதாக வெளிவரும் செய்திகளைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்தியாவில் வசிக்காத ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட விசாக்கள் தற்போதிலிருந்து செல்லுபடியாகாது. இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கான் மக்கள்  http://www.indianvisaonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் மின்னணு விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748786


(வெளியீட்டு அடையாள எண்: 1748839) வருகையாளர் எண்ணிக்கை : 395
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam