பிரதமர் அலுவலகம்

பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கத்தை முன்னிட்டு இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 24 AUG 2021 4:15PM by PIB Chennai

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்படவிருப்பதை முன்னிட்டு, இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியக் குழுவினருக்கு எனது நல்வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்கும் அனைத்து தடகள வீரர்களால் நாம் பெருமையடைகிறோம்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

 

*****



(Release ID: 1748585) Visitor Counter : 219