பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆகஸ்ட் 17-ந் தேதியன்று, பிரதமர், டோக்கியோ 2020 பேராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவினருடன் கலந்துரையாடுகிறார்

प्रविष्टि तिथि: 15 AUG 2021 7:59PM by PIB Chennai

ஆகஸ்ட் 17-ந் தேதியன்று காலை 11 மணியளவில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, டோக்கியோ 2020 பேராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவினருடன் கலந்துரையாடவுள்ளார்.

ஒன்பது விளையாட்டுப் பிரிவுகளைச் சார்ந்த 54 பேரா தடகள வீரர்கள் நமது நாட்டின் சார்பாக, இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக டோக்கியோ செல்கின்றனர். பேராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில்  இதுவரை பங்கேற்ற இந்திய குழுக்களில் இதுதான் மிகப் பெரியது. பிரதமர் மேற்கொள்ள உள்ள கலந்துரையாடல் நிகழ்வில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.


(रिलीज़ आईडी: 1746277) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam