பிரதமர் அலுவலகம்

உலக சிங்கங்கள் நாளில் சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2021 10:55AM by PIB Chennai

உலக சிங்கங்கள் நாளில், சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைத்து ஆர்வலர்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில் கூறியுள்ளதாவது;

“சிங்கம் கம்பீரமானதும், துணிவானதும் கூட. ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக இருப்பதில் இந்தியா பெருமைப்படுகிறது. உலக சிங்கங்கள் நாளில், சிங்கத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக சீராக அதிகரித்து வருவது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

குஜராத் பிரதமராக நான் இருந்தபோது, கிர் சிங்கங்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை உறுதி செய்வதற்காக பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சிங்கங்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை உறுதி செய்வதற்காகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் உள்ளூர் மக்களுடன் இணைந்து சில நடவடிக்கைகளும், உலகளவிலான சிறந்த சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1744322) வருகையாளர் எண்ணிக்கை : 391