பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவிக்கு பிரதமர் ஒப்புதல்

Posted On: 04 AUG 2021 8:24PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 நிதியுதவிக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார் .

"மத்தியப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும்," என்று பிரதமர் அலுவலக டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                                     ------

 

 

 



(Release ID: 1742533) Visitor Counter : 223