பிரதமர் அலுவலகம்
திருமிகு பாகீரதி அம்மாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2021 9:38PM by PIB Chennai
மரியாதைக்குரிய திருமிகு பாகீரதி அம்மாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“மரியாதைக்குரிய திருமிகு பாகீரதி அம்மாவிற்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.அவரது வாழ்க்கைப் பயணத்தில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக, புதிய விஷயங்களைக் கற்பதில் அவர் எப்போதும் கொண்டிருந்த ஆர்வம். அவரது மறைவினால் மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.
******************
(வெளியீட்டு அடையாள எண்: 1738604)
வருகையாளர் எண்ணிக்கை : 281
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam