சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 42 கோடியை தாண்டியது
Posted On:
23 JUL 2021 11:13AM by PIB Chennai
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 42 கோடி இலக்கை நேற்று தாண்டியது. இன்று காலை 7 மணி வரை, 51,94,364 அமர்வுகள் மூலம் மொத்தம் 42,34,17,030 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 54,76,423 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
கொவிட் பாதிப்பிலிருந்து இதுவரை 3,04,68,079 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 38,740 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 97.36.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 35,342 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 26 நாட்களாக தினசரி கொவிட் பாதிப்பு 50,000க்கும் குறைவாக உள்ளது.
நாட்டில் தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,05,513-ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.30 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,68,561 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 45.29 கோடிக்கும் மேற்பட்ட (45,29,39,545) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் கொவிட் பரிசோதனை அதிகரித்துள்ள நிலையில், வாராந்திர பாதிப்பு வீதம் 2.14 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு வீதம் 2.12 சதவீதமாகவும் தற்போது உள்ளது.
தொடர்ந்து 32 நாட்களாக தினசரி பாதிப்பு 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738011
----
(Release ID: 1738120)
Visitor Counter : 239