பிரதமர் அலுவலகம்

சந்திர சேகர் ஆசாத் பிறந்த நாளில் பிரதமர் அவருக்குப் புகழாரம்

Posted On: 23 JUL 2021 10:04AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திர சேகர் ஆசாத் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர், சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில் "பாரத மாதாவின் வீரமிக்க மகனான சந்திர சேகர் ஆசாத்தை, அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். துடிப்பான அவரது இளமைக்காலத்தில், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதில் அவர் முனைப்புடன் ஈடுபட்டார். அவர் எதிர்காலத்தை குறித்த சிந்தனையாளராக விளங்கினார். வலுவான மற்றும் நியாயமான இந்தியாவைப் பற்றி கனவு கண்டார்" என்று கூறியுள்ளார்.



(Release ID: 1738006) Visitor Counter : 236