சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

31 கோடி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUN 2021 10:46AM by PIB Chennai

குறிப்பிடத்தக்க சாதனையாக இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 31 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 42,00,839 முகாம்களில் 31,50,45,926 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 61,19,169 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 19-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 86 நாட்களுக்குப் பிறகு  5,95,565 ஆகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.97 சதவீதமாகும்.

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 17,303 சரிந்துள்ளது.

தொடர்ந்து 44-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 64,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 16,120 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 2,91,93,085 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 96.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,35,781 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 39,95,68,448 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.97 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.79 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730458

                                                                                            ------

 


(வெளியீட்டு அடையாள எண்: 1730515) வருகையாளர் எண்ணிக்கை : 330
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam