ரெயில்வே அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 200 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 12630 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம்

Posted On: 20 MAY 2021 2:13PM by PIB Chennai

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம், இந்திய ரயில்வே, இதுவரை 775 டேங்கர்களில் 12630 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 200 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 45 டேங்கர்களில் 784 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 10 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 584 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 521 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3189 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 521 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1549 மெட்ரிக் டன்தெலங்கானாவிற்கு 772 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 641 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 292 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 111 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 118 மெட்ரிக் டன், தில்லிக்கு சுமார் 3915 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720223

*****************



(Release ID: 1720298) Visitor Counter : 157