பிரதமர் அலுவலகம்

சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

Posted On: 12 MAY 2021 12:06PM by PIB Chennai

சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று செவிலியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுட்டுரைச் செய்தியில், பிரதமர் கூறியுள்ளதாவது:

சர்வதேச செவிலியர்கள் தினம், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் கடும் உழைப்பாளிகளான செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய அவர்களது கடமை உணர்ச்சி, கருணை மற்றும் மன உறுதி முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

----



(Release ID: 1717925) Visitor Counter : 170