சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இதுவரை சுமார் 17.49 கோடி கொவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது

Posted On: 08 MAY 2021 10:45AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்துஅரசின் முழுமையான அணுகுமுறையுடன்இந்திய அரசு தீவிரமாகப் போராடி வருகிறது.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறைஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது.

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 53,25,000 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவுள்ளது.

இதுவரை, 17.49 கோடி (17,49,57,770) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 16,65,49,583 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

84,08,187 கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

தமிழக நிலவரம் : தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 3.94% வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மொத்தம், 66,74,970 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,28,980 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திடம் இருப்பு உள்ளன.

புதுச்சேரி நிலவரம்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 0.76% வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,14,486 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,82,644 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரியிட ம் இருப்பு உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716980

------



(Release ID: 1717013) Visitor Counter : 219