நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் III: 28 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய உணவு கழகத்திலிருந்து உணவு தானியங்களை வழங்கும் பணி தீவிரம்

Posted On: 04 MAY 2021 5:26PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பையடுத்து, இதுபோன்ற நெருக்கடியின் போது போதிய உணவு தானியங்கள் இல்லாமல்  மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, இந்த திட்டத்தை மே மற்றும் ஜூன் மாதங்களில் அமல்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் விநியோகித்து வருகிறது.

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளிலிருந்து 28 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், உணவு தானியங்களை எடுத்துச்செல்லத் தொடங்கியுள்ளதுடன், மே 3- ஆம் தேதி வரை கூடுதலாக 5.88 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பயனாளிகளுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு யூனியன் பிரதேசம், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஒதுக்கீட்டை முழுவதுமாக பெற்றுள்ளது; ஆந்திரப் பிரதேசமும் தெலங்கானாவும் மே மாதத்திற்கான 100 சதவீத ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தினால் பயனடையும் புலம்பெயர் மக்களை ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் இந்த வசதியைப் பெறுவதற்கு ஊக்குவிக்குமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவு முழுவதையும் இந்திய அரசே ஏற்கும்.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 26,000 கோடியின் வாயிலாக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ்  சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715941

*****************



(Release ID: 1715967) Visitor Counter : 203