சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுமார் 15.5 கோடி: கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை
प्रविष्टि तिथि:
01 MAY 2021 11:26AM by PIB Chennai
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.
105-வது நாளான நேற்று (ஏப்ரல் 30, 2021), நாடு முழுவதும் 27,44,485 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக (81.84%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,99,988 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
மற்றொரு மைல்கல் சாதனையாக, கடந்த 24 மணி நேரத்தில் 19,45,299 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 73.71 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,919 பேரும், கர்நாடகாவில் 48,296 பேரும், கேரளாவில் 37,199 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 32,68,710 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 17.06 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715267
------
(रिलीज़ आईडी: 1715324)
आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam