சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சம் கொவிட் தடுப்பூசி டோஸ்களுடன் மொத்த எண்ணிக்கை 14.78 கோடியைக் கடந்தது
प्रविष्टि तिथि:
28 APR 2021 11:17AM by PIB Chennai
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 14.78 கோடியை இன்று கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 21,18,435 முகாம்களில் 14,78,27,367 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
102-வது நாளான நேற்று (ஏப்ரல் 27, 2021), நாடு முழுவதும் 25,56,182 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக (82.33%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,61,162 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 73.59 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66,358 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 32,921 பேரும், கேரளாவில் 32,819 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 29,78,709 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 16.55 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.12 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714511
*****
(Release ID: 1714511)
(रिलीज़ आईडी: 1714573)
आगंतुक पटल : 267