சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டம் : மொத்த கொவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்தது

प्रविष्टि तिथि: 21 APR 2021 12:23PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும்  திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 19,01,413 முகாம்களில் 13,01,19,310 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

95-வது நாளான நேற்று (ஏப்ரல் 20, 2021), நாடு முழுவதும் 29,90,197 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 76.32 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,097 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேரும், தில்லியில் 28,395 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்தியாவில் தற்போது 21,57,538 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக (85.01%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,67,457 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1713188

*****

(Release ID: 1713188)


(रिलीज़ आईडी: 1713215) आगंतुक पटल : 310
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu