சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசத்தில் அன்றாட கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு

प्रविष्टि तिथि: 27 MAR 2021 11:19AM by PIB Chennai

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 79.57% பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,902 பேரும், பஞ்சாபில் 3,122 பேரும், சத்தீஸ்கரில் 2,665 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 4,52,647 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.8 சதவீதமாகும்.

இன்று காலை 7 மணி வரை, 9,45,168 முகாம்களில்‌ 5.81 கோடி (5,81,09,773) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80,96,687 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 51,44,011 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 87,52,566 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 35,39,144 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 61,72,032 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,64,05,333 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மார்ச் 25-ஆம் தேதி வரை உலகளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்தியுள்ள நாடுகளுள் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆக (94.84%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 30,386 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1708008

-----

 


(रिलीज़ आईडी: 1708041) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , हिन्दी , English , Urdu , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu