பிரதமர் அலுவலகம்

கோராபுட் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் அனுமதி

Posted On: 01 FEB 2021 5:26PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் கோராபுட் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர்  திரு நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

படுகாயமடைந்தவர்களுக்கு தலா    ரூ.50,000 வழங்கவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

“ஒடிசா மாநிலம் கோரபுட்டில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வீதம் வழங்கப்படும்” என   பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவு கூறுகிறது.



(Release ID: 1694081) Visitor Counter : 93