பிரதமர் அலுவலகம்

மொராதாபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம்: பிரதமர் ஒப்புதல்

Posted On: 31 JAN 2021 4:19PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், படு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில்,

‘‘உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************************



(Release ID: 1693722) Visitor Counter : 148