சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தொற்றின் தினசரி பாதிப்புகளைவிட புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

प्रविष्टि तिथि: 27 JAN 2021 11:56AM by PIB Chennai

கொரோனா தொற்றின் தினசரி புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது மொத்தம் 1,03,59,305 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,320 பேர் குணமடைந்துள்ள நிலையில்குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,689 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 1,76,498 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 1.65 சதவீதம் மட்டுமே ஆகும்.

இன்று (ஜனவரி 27, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 73,953 பேர் உட்பட, நாடு முழுவதும்  20,29,480 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 194 முகாம்களில் 5,671  பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 36,572 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,290 பேரும், மகாராஷ்டிராவில் 2,106 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 738 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

 

நேற்று கேரளாவில் 6,293 பேரும், மகாராஷ்டிராவில் 2,405 பேரும்கர்நாடகாவில் 529 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692596

********

 

(Release ID: 1692596)


(रिलीज़ आईडी: 1692634) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam