மத்திய அமைச்சரவை

சுகாதாரம், மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா, சுரினாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 DEC 2020 3:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைசுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக, இந்தியா, சுரினாம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசுக்கும், சுரினாம் குடியரசுக்கும் இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நமது நாட்டின் சுகாதார, குடும்ப நல அமைச்சகமும், அந்நாட்டின் சுகாதார அமைச்சகமும் இணைந்து, சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்தியாவுக்கும், சுரினாமுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்தும்.

பொது சுகாதாரத் துறையில் உள்ள நிபுணத்துவத்தை பகிர்தலின் மூலமும், தொடர்புடைய பல்வேறு துறைகளில் இருதரப்பு ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதன் மூலமும், தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679345

*******

(Release ID: 1679345)



(Release ID: 1679371) Visitor Counter : 243