பிரதமர் அலுவலகம்

டியாகோ மரடோனா மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2020 9:50AM by PIB Chennai

டியாகோ மரடோனா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில், டியாகோ மரடோனா கால்பந்தின் மேஸ்ட்ரோவாக இருந்தார், அவரது புகழ் உலகெங்கும் பரவியிருந்தது. அவரது காலம்  முழுவதும், கால்பந்து துறையில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை அவர் நமக்காக அளித்துள்ளார். அவரது மறைவு நமது அனைவருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்”, என்று பிரதமர் பதிவுசெய்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1675957) வருகையாளர் எண்ணிக்கை : 130