பிரதமர் அலுவலகம்

கோவாவின் முன்னாள் ஆளுநர் திருமதி மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 18 NOV 2020 5:32PM by PIB Chennai

கோவாவின் முன்னாள் ஆளுநர் திருமதி மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

"பொதுச் சேவைகளுக்காக திருமதி மிருதுளா சின்ஹா எப்போதும் நினைவு கூறப்படுவார். திறமையான எழுத்தாளரான அவர், உலக இலக்கியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரது மறைவால் வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி," என்று தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

**********************

 

 



(Release ID: 1673811) Visitor Counter : 181