பிரதமர் அலுவலகம்

வியன்னாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் கண்டனம்

Posted On: 03 NOV 2020 11:28AM by PIB Chennai

வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘‘வியன்னாவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களால், அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், ஆஸ்திரியாவுக்கு இந்தியா துணை நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்’’ என பிரதமர் கூறியுள்ளார். 

••••••••••••••



(Release ID: 1669703) Visitor Counter : 153