இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தேசிய துப்பாக்கி சுடுதல் முகாம் உயிரி குமிழிக்குள் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பை இந்திய விளையாட்டு ஆணையமும், தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து ஏற்றுக்கொள்கின்றன

Posted On: 13 OCT 2020 1:17PM by PIB Chennai

கடந்த வாரம் அறிவித்திருந்தவாறு, டாக்டர் கார்ணி சிங் துப்பாக்கி சுடுதல் தளத்தில் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 17 வரை இரண்டு மாதங்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெறும்.

தேசிய துப்பாக்கி சுடுதல் முகாம் உயிரி குமிழிக்குள் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பை இந்திய விளையாட்டு ஆணையமும், தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து ஏற்றுக்கொள்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வீரர்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் வகையில், நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை இந்த இரு அமைப்புகளும் பகிர்ந்துகொண்டு மேற்கொள்ளும்.

துப்பாக்கி சுடும் தளத்தை பேணும் பொறுப்பை டாக்டர் கார்ணி சிங் துப்பாக்கி சுடுதல் தளத்தின் நிர்வாகம் எடுத்துக்கொள்ளும்.

அருகில் உள்ள விடுதி ஒன்றில் தங்கும் மற்றும் உணவு வசதிகளை தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் பார்த்துக் கொள்ளும். இதற்கான ஆதரவை ஏற்கனவே இருக்கும் விதிகளின் கீழ் இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663951

 

*********

(Release ID: 1663951)



(Release ID: 1664007) Visitor Counter : 143