விவசாயத்துறை அமைச்சகம்
மாநிலங்களிடம் இருந்து பெற்ற திட்ட முன்மொழிவுகளின்படி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு 2020- 21ஆம் கரீஃப் சந்தை பருவத்திற்கு 14.09 எல்எம்டி பருப்புகள் எண்ணை வித்துக்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
Posted On:
29 SEP 2020 4:20PM by PIB Chennai
2020 - 21 ஆம் ஆண்டுக்கான கரீஃப் சந்தைப் பருவம் தொடங்கியுள்ளது. இதையடுத்து முந்தைய பருவகாலங்களில் கொள்முதல் செய்தது போலவே தற்போது நிலவும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி 2020 - 21 பயிர்களை உழவர்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில், அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
மாநிலங்களிடம் இருந்து பெற்ற திட்ட முன்மொழிவுகளின்படி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு 2020- 21ஆம் கரீஃப் சந்தை பருவத்திற்கு 14.09 எல்எம்டி பருப்புகள் எண்ணை வித்துக்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும், கரீஃப் பருவ, பருப்புகள் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகள் வரப்பெற்ற பிறகு ஒப்புதல் அளிக்கப்படும். அறிவிக்கப்பட்ட அறுவடை காலத்தின்போது சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக், குறைவாக இருந்தால், விலை ஆதரவு திட்டத்தின் படி எஃப் ஏ க்யூ தர கொள்முதல் மேற்கொள்ளப்படும்.
28. 9. 2020 வரையிலான காலத்தில், அரசு இணைப்பு முகமைகளின் மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள 48 விவசாயிகள் பயனடையும் வகையில் 33 லட்ச ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்பிலான 46.35 எம்டி பச்சைப்பயிறு கொள்முதல் செய்தது. இதேபோல் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 3961 விவசாயிகள் பயனடையும் வகையில் 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்பிலான 5089 எம்டி கொப்பரை தேங்காய் (வருடம் முழுதும் விளைச்சல் தரும் பயிர்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அளவு 1.23 எல் எம் டி அளவை விட இது அதிகமாகும்.
2020 - 21 கரீஃப் சந்தைப் பருவத்தின் போது நெல் கொள்முதல் ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 26, செப்டம்பர் 2020 முதல் தொடங்கியது. 28.9.2020 வரையிலான காலத்தில் ஹரியானாவில் நெல் கொள்முதல் 3,164 எம்டி. பஞ்சாபில் 13,256 எம்டி. மொத்தம் 16,420 எம்டி. குவிண்டால் ஒன்றுக்கு 1888 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற அளவில் 31 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்புடைய இந்த நெல் கொள்முதல் ஹரியானா மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த 1,443 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் நெல் கொள்முதல் 28. 9. 2020 முதல் தொடங்கியுள்ளது.
2020 - 21 பருவத்துக்கான பருத்தி கொள்முதல் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்க உள்ளது. எஃப் ஏ க்யூ தர பருத்தி கொள்முதல் 1 அக்டோபர் 2020 முதல் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (சி சி ஐ) தொடங்கவிருக்கிறது
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660030
****
(Release ID: 1660067)
Visitor Counter : 226