பிரதமர் அலுவலகம்

அருண் ஜேட்லியின் நினைவு நாளில் பிரதமர் அவரை நினைவு கூர்கிறார்

Posted On: 24 AUG 2020 11:59AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அருண் ஜேட்லியின் நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறார்.

     அவர் பகிர்ந்துள்ள  ட்விட்டர் பதிவில், “நாம், கடந்த ஆண்டு இதே நாளில்தான் திரு அருண் ஜேட்லி் அவர்களை இழந்தோம். நான் எனது நண்பரை இழந்து தவிக்கிறேன்.

     அருண் ஜேட்லி அவர்கள், இந்தியாவுக்காக அயராது உழைத்தவர்.  அவரது நகைச்சுவை உணர்வு, அறிவுக் கூர்மை, சட்ட அறிவு, அன்பான ஆளுமை அனைத்தும் மாறாப் புகழ் பெற்றவை” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***



(Release ID: 1648144) Visitor Counter : 142