பிரதமர் அலுவலகம்
கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2020 10:39PM by PIB Chennai
கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், “கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தால் வேதனை அடைந்தேன். தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் குறித்தே நான் சிந்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையட்டும். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தேன். விபத்து நடந்த இடத்திற்கு, அதிகார வட்டாரங்கள் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1644644)
வருகையாளர் எண்ணிக்கை : 211
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam