சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

முதலாவது ஊரடங்கில் இருந்து இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் (CFR) மிகக் குறைவானது 2.15%


மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 11 லட்சம்


கடந்த 24 மணி நேரத்தில் 36,500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்

Posted On: 01 AUG 2020 2:43PM by PIB Chennai

உலகளவில் மிகக் குறைந்த கோவிட்-19 இறப்பு விகிதத்தைப் பதிவு செய்த சாதனையை இந்தியா தொடர்ந்து பராமரித்து வருகிறது. கொரோனா இறப்பு விகிதம் இன்று 2.15 சதவீதமாக உள்ளது, இது முதலாவது ஊரடங்கு தொடங்கியதிலிருந்து மிகக் குறைவாகும். இது ஜூன் நடுப்பகுதியில் இருந்து தொடர்ந்து 3.33 சதவீதமாகக் குறைந்து வருகிறது.

 

இது மாநில / யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்களுடன் சேர்ந்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த, முன்கூட்டியே, தரப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் “பரிசோதித்தல், பின்தொடர்தல், சிகிச்சையளித்தல்” என்ற கூட்டுத் திட்டத்தின் முயற்சிகளுக்கு ஒரு சான்று. நோய் அறிகுறி தென்பட்டவர்களுக்கு வலிந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நோயை முன்கூட்டியே அறிந்து அதிரடியாக அவர்களைத் தனிமைப்படுத்தியதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திறமையான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றால் இறப்பு விகிதத்தை வெகுவாகக் கட்டுபடுத்தியுள்ளது, இது கோவிட்-19 இன் இறப்பு விகிதத்தை இந்தியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது என்பதைக் குறிக்கிறது.

 

 

நோய்த் தொற்றின் இறப்பு விகிதம் குறைந்த விகிதத்தில் வைக்கப்படுவதால், விரிவான கட்டுப்பாட்டுத் தர அணுகுமுறையின் அடிப்படையில் பயனுள்ள கட்டுப்பாட்டு உத்தி, அதிவேக சோதனை மற்றும் தரப்படுத்தப்பட்ட மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் விளைவாக ஒரு நாளைக்கு 30,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து குணமடைந்து வருகின்றனர்.

 

நோய்த் தொற்றால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 11 லட்சம். கடந்த 24 மணி நேரத்தில் 36,569 நோயாளிகள் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்ந்துள்ளன. கோவிட்-19 நோயாளிகளின் மீட்பு விகிதம் 64.53 சதவீதமாக உள்ளது.

 

மீட்டெடுப்புகளில் இத்தகைய தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக, மீட்கப்பட்ட நோயாளிகளுக்கும், தற்போது நோய்த் தொற்றில் உள்ள COVID-19 நோயாளிகளுக்கும் இடையிலான இடைவெளி தற்போது 5,29,271 ஆக உள்ளது. தற்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட (5,65,103) நோயாளிகள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.

 

நோயாளிகளைத் தடையில்லாமல் கவனிப்பதற்காக உள்ள சிறப்பு மருத்துவனையின் 3-அடுக்கு மருத்துவமனை உள்கட்டமைப்பு, உடனடி சோதனைகள் மற்றும் சிகிச்சையை உறுதி செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 1488 அர்ப்பணிப்பு COVID மருத்துவமனைகள் 2,49,358 தனிமை படுக்கைகள், 31,639 ஐசியு படுக்கைகள் மற்றும் 1,09,119 ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள், 16,678 வென்டிலேட்டர்கள் உள்ளன. 2,07,239 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 18,613 ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் 74,130 ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் மற்றும் 6,668 வென்டிலேட்டர்கள் கொண்ட 3231 பிரத்யேக COVID சுகாதார மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட 10,02,681 படுக்கைகள் கொண்ட 10,755 COVID பராமரிப்பு மையங்கள் இப்போது தயார் நிலையில் உள்ளன. மேலும் மத்திய அரசு 273.85 லட்சம் N95 முகக்கவசங்கள் மற்றும் 121.5 லட்சம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) மற்றும் 1083.77 லட்சம் ஹைடிராக்சி குளோரோ குவின் மாத்திரைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

 

********



(Release ID: 1642884) Visitor Counter : 158