சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மூன்றாவது நாளாக ஒரு நாளில் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 34,602 கொவிட் நோயாளிகள் குணமாகி வீடு திரும்பினர்

प्रविष्टि तिथि: 24 JUL 2020 3:26PM by PIB Chennai

தொடர்ந்து மூன்றாவது நாளாக, ஒரு நாளில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,602 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 8,17,208 ஆகும். இதனால் கொவிட்-19 தொற்றிலிருந்து நோயாளிகள் குணமடையும் விகிதம் 63.45 விழுக்காடு என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் சிகிச்சை பெற்று வருபவர்களை (இன்று 4,40,135) விட 3,77,073 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். இந்த இடைவெளியானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளாலும், முன்னணியில் உள்ள மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பாலும், குணமடைவோர் விகிதம் அதிகரித்து, இறப்பு விகிதம் தொடர்ந்து குறைகிறது. தற்போது இத்தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.38 விழுக்காடு மட்டுமே.

 

                                                                     ****
 


(रिलीज़ आईडी: 1640914) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam