பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாடு
Posted On:
20 JUL 2020 8:07PM by PIB Chennai
விமானப் படை கமாண்டர்கள் மாநாடு 2020 ஜூலை 22 முதல் 24 ஆம் தேதி வரையில், புது டெல்லியில், விமானப் படை தலைமையகத்தில் (வாயு பவன்) நடத்தப்படும். ``அடுத்த தசாப்தத்தில் இந்திய விமானப் படை'' என்பது மாநாட்டின் விவாதத்துக்குரிய முக்கிய தலைப்பாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜூலை 22 ஆம் தேதி இதில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார். பாதுகாப்புத் துறை செயலாளர், பாதுகாப்புத் தளவாட உற்பத்திப் பிரிவு செயலாளர் ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த மாநாட்டிற்கு விமானப் படை தலைமைத் தளபதி, ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பாடாவ்ரியா தலைமை வகிப்பார். மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டின் போது, இப்போதுள்ள செயல்பாட்டு சூழ்நிலை & காவல் பணி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்படும். அடுத்த தசாப்தத்தில் இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
*****
(Release ID: 1640120)
Visitor Counter : 169