ஆயுஷ்

தேசிய மூலிகைத் தாவரங்கள் வாரியத்திற்கும், ஐசிஏஆர்-தேசிய தாவர மரபணு ஆதார வள அமைப்பிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 07 JUL 2020 2:43PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலிகைத் தாவரங்கள் வாரியமும், மத்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஐசிஏஆர் – தேசிய தாவர மரபணு ஆதார வள அமைப்பும் இணைந்து 2020 ஜூலை
6-ந் தேதி அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மருத்துவ மற்றும் வாசனைத் தாவரங்களின் ஆதார வளங்களை, ஐசிஏஆர்- தேசிய தாவர மரபணு ஆதார வள அமைப்பின் மையங்களில், நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து வைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும் தாவரத்தின் ஜெர்ம் பிளாசத்தைப் பாதுகாக்கும் நுட்பங்கள் குறித்த பயிற்சிக்கும் இது வழிவகுக்கும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1636964

***

 



(Release ID: 1636978) Visitor Counter : 194