பிரதமர் அலுவலகம்

மன் கிபாத் 2.0’, 12வது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

மன் கிபாத் 2.0’, 12வது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.
நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கூட்டு முயற்சிகள் மூலம் மேற் கொள்ளப்படுகின்றது என பிரதமர் கூறியுள்ளார்.
சேவை மற்றும் தியாகம் என்ற கருத்து நமது இலட்சியம் மட்டுமல்ல: இது ஒரு வாழ்க்கை முறை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்: பிரதமர்
சமுதாயத்துக்கும், எதிர்ப்பு சக்திக்கும் மற்றும் ஒற்றுமைக்கும் யோகா நல்லது: பிரதமர்
நாட்டை உயர்ந்த உச்சத்துக்கு கொண்டு செல்ல சுயசார்பு இந்தியா பிரசாரத்தில் பங்கெடுக்கவேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

Posted On: 31 MAY 2020 4:04PM by PIB Chennai

நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கூட்டு முயற்சிகள் மூலம் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன என மன் கி பாத் 2.0’ 12வது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திரமோடி கூறினார். நாட்டின் முக்கியமான பொருளாதாரப் பிரிவுகள் திறக்கப்பட்டாலும் கூட, கோவிட் தொற்றுக்கு மத்தியில் மக்கள் எச்சரிக்கையாகவும், கவனமுடனும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில்கள் உட்பட ரயில் சேவைகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். விமான சேவைகள் மற்றும் தொழில் துறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்விழிப்புணர்வு இல்லாமல் இருக்கக்கூடாது, மக்கள் 2 அடி தூர தனி நபர் இடவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், முடிந்தஅளவு வீட்டில் இருக்கவேண்டும் என அவர் எச்சரித்தார். பல கஷ்டங்களுக்குப் பிறகு, நாட்டின் நிலைமையைக் கையாள எடுத்த நடவடிக்கைகள் வீண்போகக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

மக்கள் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டிய பிரதமர், இது மிகப்பெரிய பலம் என கூறினார். ‘சேவையே மகிழ்ச்சி, சேவையே திருப்திஎன்ற கருத்து நமக்கு பழக்கப்பட்டதுதான் என பிரதமர் கூறினார். நாடு முழுவதும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு, தனது ஆழ்ந்த அன்பைத் தெரிவித்த பிரதமர், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களின் சேவை உணர்வையும் பாராட்டினார். இந்த நெருக்கடியான நேரத்தில் சுய உதவிக்குழு பெண்களின் குறிப்பிடத்தக்க பணியையும் அவர் மெச்சினார்

இந்த சிக்கலான நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கே.சி.மோகன், அகர்தாலவைச் சேர்ந்த கவுதம் தாஸ், பதன்கோட்டை சேர்ந்த ராஜூ ஆகியோர் மற்றவர்களுக்கு உதவிகள் வழங்கியதையும் பிரதமர் எடுத்துக் கூறினார். சுயஉதவிக் குழு பெண்களின் விடாமுயற்சிக் கதைகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வருவதாக அவர் தெரிவித்தார்.

தொற்றை எதிர்கொள்வதில், தனிநபர்கள் முக்கியமான பங்காற்றி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதையும் பிரதமர் பாராட்டினார்நாசிக்கைச் சேர்ந்த ரஜேந்திர யாதவ், அவரது டிராக்டருடன் பொருத்தப்பட்ட கிருமிநாசினி இயந்திரத்தை உருவாக்கியதையும், 2 அடி தூரம் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற கடைக்காரர்கள் பலர் பெரிய பைப்லைன்கள் பொருத்தியிருந்த்தையும் பிரதமர் எடுத்துக்காட்டாக கூறினார்தொற்று நேரத்தில் மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு தனது வேதனையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், கொரோனா வைரஸ் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ள போதிலும், தொழிலாளர்களும், பணியாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றார்.

நிவாரணப் பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள், அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்கள்  முழு வேகத்தில் கைகோர்த்துச் செயல்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.

நாட்டில் நடக்கும் விஷயங்களையும், அதற்காக  மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சித் துறையினர் 24 மணி நேரமும் கடுமையாகப் பணியாற்றுவதையும் ஒட்டு மொத்த நாடும் நன்கு புரிந்து கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான தொழிலாளர்களை ரயில்களிலும் பஸ்களிலும் அழைத்துச் சென்றவர்களின் பணியையும், அவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தி உணவு அளிக்க ஏற்பாடு செய்தவர்களின் பணியையும்  அவர் வெகுவாகப் பாராட்டினார்.

புதிய தீர்வைக் காண்பதுதான் இப்போதைய தேவை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த திசையில் அரசு பல நடவடிக்கைகள் எடுப்பதாக அவர் கூறினார். கிராமப்புற வேலைவாய்ப்புகள், சுயவேலைவாய்ப்புகள், சிறுதொழில்களுக்கு அதிக சாத்தியங்களுக்கு, மத்திய அரசின் சமீபத்திய முடிவுகள் வழி செய்துள்ளதாக பிரதமர் கூறினார். சுயசார்பு இந்தியா பிரசாரம், இந்த தசாப்த்தத்தில், நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

தற்போதைய கொரோனா தொற்று நேரத்தில், யோகா, ஆயுர்வேதத்தை அறிந்து அதன் வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவதாக பிரதமர் கூறினார்சமூகத்தின் நன்மைக்கும், எதிர்ப்பு சக்திக்கும், ஒற்றுமைக்கும் யோகாவைப் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார். தற்போதைய கொரோனா தொற்று நேரத்தில், யோகா முக்கியமானதாக மாறி விட்தாகவும், ஏனென்றால், இந்த வைரஸ் சுவாச மண்டலத்தைப் பாதிக்கிறது எனவும் பிரதமர் கூறினார். யோகாவில் பல பிராணாயாமங்கள் இருப்பதாகவும், வை சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி அதன் பலன்கள் நீண்டகாலம் நீடித்திருக்கச் செய்வது கண்டறியப்பட்டுள்து எனவும் பிரதமர் கூறினார்.

ஆயுஷ் அமைச்சகம் நடத்தும்மை லைப், மை யோகா என்ற சர்வதேச வீடியோ பிளாக் போட்டிக்கு மக்கள் தங்கள் வீடியோக்களை  பகிர வேண்டும் என பிரதமர் மேலும் வலியுறுத்தினார். இந்தப் போட்டியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் எனவும், வருகிற சர்வதேச யோகா தினத்ததில் அனைவரும் பங்கு வகிக்கவேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அரசின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகள் ஒரு கோடியைக் கடந்துவிட்ட தகவலைப் பகிர்ந்து கொள்வதில் பிரதமர் பெருமை அடைந்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகள்கொரோனா நேரத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களுக்கு அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் நாம் கொரோனாவுக்கு எதிராகவும், உம்.பன் புயல் பாதிப்புக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் கூறினார். அதி தீவிரப் புயல் உம்.பன்-ஐ எதிர்கொண்ட மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மக்களின் தைரியத்தையும், துணிவையும் அவர் பாராட்டினார். இந்த மாநிலங்களின் விவசாயிகள் சந்திந்த இழப்புகளுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்கள் சோதனையை எதிர்கொண்ட விதமும், அவர்கள் மன உறுதியைக் காட்டிய விதமும் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார்.

புயல்பாதிப்போடு, நாட்டின் பல பகுதிகளில் வெட்டுக்கிளித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்று திரு மோடிகூறினார். நெருக்கடியான நேரத்தில், அரசு எவ்வாறு இடைவிடாமல் செயல்படுகிறது என்பதையும், மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறையைச் சந்திக்காததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்இந்தநெருக்கடியால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவ, மத்திய, மாநில அரசுகள், வேளாண் துறையினர் முயற்சிகள் மேற்கொள்கின்றனர் என பிரதமர் கூறினார்.  

தற்போதைய தலைமுறையினர் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தண்ணீரை சேமிக்கும் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மழைநீர் சேமிப்பதையும், நீர்ப்பாதுகாப்புக்கு அனைவரும் பாடுபடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த சுற்றுச்சூழல் தினத்தில் நாட்டு மக்கள் மரம் நட்டு இயற்கைக்கு சேவை செய்ய வேண்டும் எனவும், இயற்கையுடன் அன்றாட உறவை ஏற்படுத்த தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். முடக்கம், வாழ்க்கையை மந்தமாக்கிவிட்டது ஆனால், இயற்கையை முறையாகப் பார்க்கவும் ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளது, மேலும் வன விலங்குகள் அதிகம் வெளிவர தொடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.  

கவனக்குறைவாக அல்லது குறைபாடாக மாறுவது ஒரு விருப்பமாக இருக்கமுடியாது என்று கூறி பிரதமர் தனது உரையை முடித்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் அதிக அளவு தீவிரமானது என்றார் பிரதமர்.

----

 

 

 

 

 



 

 


 



(Release ID: 1628246) Visitor Counter : 243