உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உயிர்காக்கும் உதான் விமானங்கள் மூன்று லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாகப் பயணித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அத்தியாவசிய மருந்து பொருள்களைக் கொண்டு சென்றன

Posted On: 20 APR 2020 3:16PM by PIB Chennai

உயிர்காக்கும் உதான் விமானங்கள் மூன்று லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக வானில் பயணித்து 507.85 ன் அத்தியாவசிய மருந்துப் பொருள்ள் கொண்ட சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டுள்ள. இதுவரை, உயிர்காக்கும் உதான் சேவையின் கீழ், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் விமானங்கள் மூலம் 301 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 184 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன. கோவிட் 19 நோய்க்கு எதிரா நாடு மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக, நாட்டிலுள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு, அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வதற்காக, இந்த உயிர்காக்கும் உதான் விமானங்கள், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன.

 

 

 ஜம்மு காஷ்மீர், லடாக், தீவுகள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில், பவன் ஹன்ஸ் லிமிடெட் உட்பட பல ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் அத்தியாவசிய மருந்துப் பொருள்களும், நோயாளிகளும் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். 19 ஏப்ரல் 2020 வரையிலான காலத்தில் பவன் ஹன்ஸ் 6537 கிலோ மீட்டர் பயணித்து, 1.90 ன் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டுள்ளது. உள்நாட்டு உயிர்காக்கும் உதான் சரக்குப் போக்குவரத்தில், கோவிட்19 தொடர்பான ரீஏஜென்டுகள், என்சைம்கள், மருத்துவப்பரிசோதனை உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், கவசங்கள், கையுறைகள், ஹிந்துஸ்தான் ரப்பர் மரப்பால் லிமிடெட் (Hindustan Latex Limited - HLL) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் இதர பொருள்கள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளால் கேட்டுக்கொள்ளப்பட்ட சரக்குகள், அஞ்சல் உறைகள் போன்ற சரக்குகள் கையாளப்பட்டன.



(Release ID: 1616407) Visitor Counter : 258