ரெயில்வே அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போர்: ரயில்வே துறை, நாடு முழுதும் 1150 டன் மருந்துகளை விநியோகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 APR 2020 3:27PM by PIB Chennai
நாடு முழுதும் முழு ஊரடங்கு (Nationwide Lock Down) அமலில் உள்ள நிலையில், கோவிட் -19 கிருமித் தொற்றினை ஒழிக்கும் வகையில் மருந்துகள், முகக்கவசங்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை இந்திய ரயில்வே நாடு முழுதும் வழங்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்குத் துணைபுரியும் வகையில் பார்சல் வாகனங்கள் மூலம் இவை வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த 2020, ஏப்ரல் 18ஆம் தேதி வரையில் மொத்தம் 1150 டன் மருந்துப் பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
(வெளியீட்டு அடையாள எண்: 1616090)
வருகையாளர் எண்ணிக்கை : 348
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada