பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஊரகப் பகுதிகளில் கொவிட்-19 பரவலைத் தடுக்க நாடெங்கிலும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Posted On: 16 APR 2020 11:14AM by PIB Chennai

 

நாட்டின் உள்ளடங்கிய பகுதிகளில் கொவிட்-19 பரவலைத் தடுக்க நாடெங்கிலும் உள்ள மாவட்ட நிர்வாகங்களும், கிராமப் பஞ்சாயத்துகளும் சுறுசுறுப்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொது முடக்க விதிகள் மீறப்படாமல் இருப்பதற்கும், தனி நபர் விலகல் விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளோடு நெருங்கி இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

பஞ்சாயத்து அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவை சிறந்த நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டுகளாக மற்றவர்களால் பின்பற்றப்படலாம்.



(Release ID: 1614940) Visitor Counter : 205