அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஏ.ஆர்.சி.ஐ. தயாரித்த கைகளுக்கான கிருமிநாசினி, கோவிட்-19 நெருக்கடியில் பணியில் உள்ள காவல் துறை அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டது

Posted On: 03 APR 2020 5:38PM by PIB Chennai

கைகளுக்கான கிருமிநாசினிகள் சந்தையில் பற்றாக்குறையாக இருப்பதைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் உள்ள உலோகத்தூள் மற்றும் புதிய மூலப்பொருள்களுக்கான பன்னாட்டு உயர் ஆராய்ச்சி மையம்  (International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials - ARCI) உலகத் தரத்திலான கை கிருமிநாசினியைத் தயாரித்துள்ளது. ஹைதராபாத்தில் காவல் துறை அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் நிறுவன அலுவலர்களுக்கு அவை வழங்கப்பட்டன. விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்களாக முன்வந்து 40 லிட்டர் கை கிருமிநாசினியை தயாரித்தனர்.

இதில் கணிசமான பகுதி ராச்சகொண்டா ஆணையரகப் பகுதியின் டி.சி.பி.யான திரு. சன்பிரீத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

சில மணி நேரங்களில் 40 லிட்டர் கை கிருமிநாசினி தயாரித்த குழுவினர்.

 

 

*****



(Release ID: 1610958) Visitor Counter : 110