பிரதமர் அலுவலகம்
நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
நமது சூழ்நிலைகளை வெல்வதற்கான மன உறுதியை விழாக்கள் வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்
Posted On:
25 MAR 2020 9:52AM by PIB Chennai
நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களையொட்டி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் .
"இந்தியா முழுவதும் பல்வேறு விழாக்களை நாம் கொண்டாடுகிறோம் . பாரம்பரிய முறையிலான காலண்டர்படி புத்தாண்டையும் நாம் தொடங்குகிறோம். உகாதி, குடி படவா, நவ்ரே, சாஜிபு செராவ்பா ஆகியவற்றுக்கு வாழ்த்துக்கள். இந்தப் புனித விழாக்கள் நமது வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.
கொவிட்- 19 என்ற கொடிய நோயை எதிர்த்து நமது தேசம் போராடும் காலத்தில் இந்த விழாக்களை நாம் எதிர்நோக்குகிறோம். இந்த விழாக்கள் வழக்கமானதாக இருக்காது .ஆனால், நமது சூழ்நிலைகளை வெல்வதற்கான மன உறுதியை இவை வலுப்படுத்தும் . கொவிட் - 19க்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்”
“மணிப்பூரின் எனது சகோதர சகோதரிகளுக்கு சாஜிபு செராவ்பா வாழ்த்துகள் ! ஒவ்வொருவரும் அமைதி மற்றும் வளத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும். மக்களின் நல்ல ஆரோக்கியத்திற்கான சிறப்பு பிரார்த்தனைகள்.
நவ்ரே முபாரக்!
இந்த விழா ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்.
கொவிட் - 19க்கு எதிராக தேசம் எதிர்நோக்கியுள்ள முக்கியமான போரில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைய முன்வருவோம்” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
*****
(Release ID: 1608046)
Visitor Counter : 209
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam