சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நோவல் கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) குறித்த கூடுதல் பயண அறிவுரை

Posted On: 17 MAR 2020 10:29AM by PIB Chennai

மார்ச் 11, 2020 மற்றும் மார்ச் 16, 2020 தேதிகளில் வெளியிடப்பட்ட பயண அறிவுரைகளின் தொடர்ச்சியாக, கீழ்காணும் அறிவுரைகள் கூடுதலாக வெளியிடப்படுகிறது:

  1. ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளிலிருந்து எந்த விமானமும் இந்திய நேரப்படி 15.00 மணிக்கு பிறகு இந்தியாவுக்கு புறப்படாது. விமான நிறுவனங்கள் புறப்படும் இடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. இந்த அறிவுரை ஒரு தற்காலிகமானது என்பதோடு, 31 மார்ச் 2020 வரை செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு இது மறுஆய்வு செய்யப்படும்.

 

***********



(Release ID: 1606677) Visitor Counter : 182