மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்திடவும், முன்தேதியிட்டு ஏற்பளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 JUN 2019 8:06PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்திடவும், முன்தேதியிட்டு ஏற்பளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையிலான முதலீடு அதிகரிக்கும். இரு நாடுகளிலும் முதலீடு செய்யும் இருதரப்பு முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்.

*****



(Release ID: 1574410) Visitor Counter : 138