பிரதமர் அலுவலகம்
தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப்பில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2025 10:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப்பில் வழிபாடு மேற்கொண்டார்.
தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப்பில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம் என்று பிரதமர் கூறியுள்ளார். சீக்கிய குருமார்களின் உன்னத போதனைகள் முழு மனிதகுலத்தையும் ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப்பின் பயண காட்சிகளையும் பிரதமர் பகிர்ந்துளளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப்பில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீக அனுபவம். சீக்கிய குருமார்களின் உன்னத போதனைகள் முழு மனிதகுலத்தையும் ஊக்குவிக்கின்றன. இந்த குருத்வாரா ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. அவரது துணிச்சலும் நீதிக்கான அர்ப்பணிப்பும் பெரிதும் ஊக்கமளிக்கின்றன.”
----
(Release ID: 2185651)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240909)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam