பிரதமர் அலுவலகம்
பிரதமரை செர்பியா அதிபர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2026 3:40PM by PIB Chennai
தில்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே, செர்பியா அதிபர் திரு அலெக்சாண்டர் வுசிச் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இரு தலைவர்களும் பாதுகாப்பு, உற்பத்தி, டிபிஐ, உரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தனித்தனி பதிவுகளில், திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"இந்தியா ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே, செர்பியா அதிபர் அலெக்சாண்டர் வுசிச்சைச் சந்தித்தேன். பாதுகாப்பு, உற்பத்தி, டிபிஐ, உரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். பல ஆண்டுகளாக, இந்தியாவும் செர்பியாவும் நெருக்கமாக பணியாற்றியுள்ளன. மேலும் வரும் காலங்களில் நமது உறவுகள் இன்னும் அதிக உத்வேகத்தைப் பெறும் என்று நான் நம்புகிறேன்."
***
AD/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229831)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam